free website hit counter

இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: ஹக்கீம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
காஸா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
"இஸ்ரேலை அச்சுறுத்தி, காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இலங்கை இராஜதந்திர உறவுகளை விலக்கிக்கொள்ளும் என்று தெரிவிக்கவும். கடைசி முயற்சியாக இதை செய்யுங்கள்" என்று ஹக்கீம் பாராளுமன்றத்தில் கூறினார்.

இதற்குப் பதிலளித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதும் பேணுவதுமாகும்.

"எங்கள் வெளியுறவுக் கொள்கை அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதும், பேணுவதும் ஆகும். இருப்பினும், நாங்கள் பாலஸ்தீனத்தை கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை," என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction