free website hit counter

தாள் குறியிடல் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி – கல்வி அமைச்சு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான தாள் குறியிடல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தை உள்ளடக்கிய உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தாள் குறியிடும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கட்டணம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula