இலங்கையின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டன.