free website hit counter

08 ஆம் வகுப்பு முதல் ICT பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI)

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையின் பாடசாலைகளில் தரம் 08 தொடக்கம் மாணவர்களுக்காக தற்போதைய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பாடத்திட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்படி தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள ICT பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடம் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் 17 பள்ளிகளின் பங்கேற்புடன் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கும்.

சர்வதேச தரத்திற்கமைய இலங்கை மாணவர்களுக்கு உரிய பாட அறிவை வழங்குவதற்கு மைக்ரோசாப்ட் கூட்டுத்தாபனம் கல்வி அமைச்சுடன் கைகோர்த்துள்ளதாக பிரேமஜயந்த உறுதியளித்தார்.

கல்கிசை மகளிர் உயர்தரப் பாடசாலையின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction