free website hit counter

உயர்தரப் பரீட்சை : மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆரம்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விடைத்தாள் மீள் திருத்தலுக்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 05) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் படி, மறு திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் 05 - 19 ஜூன் 2024 வரை ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையத்தளங்களின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் முடிவுகள் மே 31 அன்று வெளியிடப்பட்டன.

பரீட்சைக்குத் தோற்றிய மொத்தம் 269,613 பேரில் 173,444 விண்ணப்பதாரர்கள் (64.33%) பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula