இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) கூற்றுப்படி, வியாழக்கிழமை (18) திருகோணமலை கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
GSMBயின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.06 மணிக்கு திருகோணமலையிலிருந்து வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகாகனதராவ, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நாட்டின் நான்கு நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்களிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்றும், கடற்கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.