free website hit counter

வெடுக்குநாறிமலையில் சிவன் மீளவும் பிரதிஷ்டை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் விசமிகளால் உடைத்தெறியப்பட்ட வழிபாட்டு விக்கிரகங்கள் மீளவும் இன்று பிரதிஷ்டடை செய்யப்பட்டுள்ளது.

ஆலயவழிபாடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தபோது, வெடுக்குநாறிமலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்ட்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் வவுனியா நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று  வெடுக்குநாறிமலைக்கு சென்ற பக்தர்களின் பெருமுயற்சியில், மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்ட புதிய விக்கிரகங்கள்,   உடைத்தெறியப்பட்ட விக்கிரகங்கள் இருந்த இடங்களில், மீளவும்  பிரதிஷ்ட்டை செய்யப்பெற்று வழிபாடியற்றப்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula