free website hit counter

இலங்கையர்களாக நாம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது : ஜனாதிபதி கோட்டபாய

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாட்டுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது ட்விட்டர் சமூகவலைத்தளத்தில், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் இதற்கான பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது குறிப்பில்,

"நாம் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
குறுகிய நோக்கங்களுக்காக அழிவுகரமான பரிமாணங்களுக்கு மக்களின் அழுத்தத்தைத் தள்ளும் சில குழுக்களின் முயற்சிகளை முறியடிப்பதில் நீங்கள் அனைவரையும் ஒன்றிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula