free website hit counter

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

6 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் உடன் இணைந்த அனைத்து பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுக்கடையுடன் இணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் பார்களை நேரடியகவோ,மறைமுகமாகவோ நடத்த அனுமதியில்லை எனவும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது எனவும் மேலும் தெரிவித்த நீதிபதி டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து ,தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction