free website hit counter

பாகிஸ்தான் எல்லை அருகே மின்வெட்டு ஒத்திகை நடத்திய இந்தியா

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், போரின் போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு ஒத்திகை பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்த பகுதியில், நேற்றிரவு 9:00 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. முன்னதாக, மின்சாரவாரியம் சார்பில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனால் எல்லையோர பகுதி மக்களிடம் போர் பதற்றத்துடன் வீடுகளுக்குள் முடங்கினர். பாதுகாப்பு காரணங் களுக்காகவே மின் வெட்டு ஒத்திகை நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula