free website hit counter

அமைச்சர் கொடுத்த உறுதி!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மின் வாரியத்தில் காலி பணியிடங்கள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, மானியகோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 17 தொழிற்சங்க சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் 1 லட்சத்து, 45 ஆயிரம் பணியிடங்களில் ஏறத்தாழ 55 ஆயிரம் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன் வைத்து இருக்கிறார்கள். இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று படிப்படியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction