free website hit counter

ஆர்யா - பா.ரஞ்சித் கூட்டணியின் கனவு கலைந்தது !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கதாநாயகன் கதையையும் கதாபாத்திரத்தையும் தோளில் தாங்கி, கடும் உழைப்பைக் கொடுக்கும் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கரகோஷத்தைப் பெரும்போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. படத்தை எடுத்த இயக்குநரோ இன்னும் கர்வம் கொள்வார்.

ஆர்யாவும் பா.ரஞ்சித்தும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை அத்தனை நேசித்துத்தான் உருவாக்கினார்கள். வடசென்னையில் பரம்பரை பரம்பரையாக வாழும் குத்துச் சண்டை வீரர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் மையப்படுத்திய படம். இதில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்காகக் கடுமையாக உழைத்தனர்.

இலங்கையின் புதிய மீட்பரா பஷில் ?

படம் முடிவடைந்து, பார்த்த விஜபிகள் அனைவரும் பாராட்டிய நிலையில் திரையரங்க வெளியீட்டுக்கு படம் தயாராக இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை முடிவடைந்து திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத நிலை. இதனால் அமேசான் ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. வரும் ஜூலை 22-ஆம் தேதி இணையத்தில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை. விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற ஆர்யா - ரஞ்சித் கூட்டணியின் கனவை கொரோனா கலைத்துப் போட்டுவிட்டது.

சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்ஷக்கள்!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction