free website hit counter

நயன்தாராவின் இரண்டு புதுப்படங்கள் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்ட நயன்தாரா, மிலந்த் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பதாக இருந்தார்.

ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதில் விக்னேஷ் சிவனுக்கு பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் படத்தை தள்ளி வைத்துள்ளனர். இதுதவிர தற்போது 4 படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் 2 படங்கள் ஜூலை 15-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

அதில் முதலாவதாக எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் 2 படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் முதல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும்15-ம் தேதி பூஜையுடன் தொடங்குகிறது. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்னேஷ் இதை இயக்குகிறார். நயன்தாரா நடிக்கும் மற்றொரு படத்தை,‘எலி’, ‘தெனாலிராமன்’ படங்களை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 30- ஆம் தேதி தொடங்குகிறது. இவை இரண்டிலுமே நயன்தாராதான் ஹீரோ.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction