free website hit counter

இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென அதிகரிப்பு - மத்திய வங்கி அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (31.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.98 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 417.48 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 417.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction