free website hit counter

இந்தியாவில் வரும் கல்வியாண்டு முதல் பொறியில் பாடங்கள் தமிழில் கற்பிக்க அனுமதி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் இனி பொறியில் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரைகாலம் பொறியில் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் தாய்மொழிகளில் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் பொறியில் பாடங்களில் சேரும் ஆர்வம் குறைந்திருந்தது.

இந்நிலையில் இந்திய தொழில்நுட்ப கவுன்சில்; வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை மாணவர்களுக்கு தாய்மொழிகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆகையால் தமிழ் உள்ளிட்ட இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளில் பொறியல் பாடங்களை பயிலலாம். மேலும் 11 இந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பொறியல் பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை காலமும் இடம் பெற்றிருந்தமை மாற்றம் அடைந்து இனி தாய்மொழிகளிலும் இடம்பெறவுள்ளது குறிப்பிடதக்கது,

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction