free website hit counter

Sidebar

25
பு, ஜூன்
25 New Articles

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயருகிறது.
கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். மேலும், விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்படும்.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை காணவும், விவேகானந்தை நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்தும் மகிழ்வர்.

இந்த நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

சாதாரண கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.75ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200 ஆக இருந்த நிலையில், புதிய கட்டணமாக இன்று முதல் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula