free website hit counter

மாலைத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்தியா ஒப்புதல்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மாலைத்தீவில் இருந்து தனது வீரர்களை திரும்பப் பெற இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் தலைவர் மொஹமட் முய்ஸு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மாலைத்தீவின் "இந்தியாவே முதல்" கொள்கையை மாற்ற பிரச்சாரம் செய்து, 75 பேர் கொண்ட ஒரு சிறிய இந்திய இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதாக உறுதியளித்த முய்ஸு செப்டம்பர் மாதம் மாலைத்தீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.

"நாங்கள் நடத்திய கலந்துரையாடலில், இந்திய வீரர்களை அகற்ற இந்திய அரசு ஒப்புக்கொண்டது" என்று முய்சு செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் "வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைக்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்" எனவும் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction