free website hit counter

நாளை முதல் கொழும்பில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை செப்.6 முதல் கொழும்பு 1 முதல் 15-இற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு மாநகர சபை சீன தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளை இவர்களுக்காக பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணி கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட 6 இடங்களில் முன்னெடுக்கபடவுள்ளது. அதற்கமைய நாளை கொழும்பு – சுகததாச விளையாட்டரங்கு, ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், போர்ப்ஸ் வீதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபம், கெம்பல் பூங்கா, நாரஹென்பிட்டி ஷாலிகா மண்டபம் மற்றும் வௌ்ளவத்தை ரொக்ஸி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction