free website hit counter

இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய - உறுதிப்படுத்தியுள்ள விமானப்படை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி மாலைத்தீவிற்கு சென்ற விமானம் தொடர்பில் விமானப்படை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரின் துணைவியாருடன் மேலும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றமையை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு குடியேற்றம், சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த வானூர்தி வழங்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று(13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து Antonov-32 விமானத்தில் மாலைதீவு நோக்கி பயணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction