இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சோதனை நடத்தப்பட்டது,
நேற்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர் ஏனைய குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.