free website hit counter

கேமரூன் கிரீன் மற்றும் மேத்யூ வேட் அதிரடியினால் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், கேமரான் கிரீன் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 61 ரன்கள் விளாசினார். ஸ்மித் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஜோஸ் இங்லிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி 4 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 23ம் தேதி நடக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction