free website hit counter

நேற்று ஆப்கான் காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட 73பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுதும் கோவிட்-19 பெரும் தொற்றின் டெல்டா திரிபு வீரியத்துடன் பரவி வரும் நிலையில், நியூசிலாந்தின் கடந்த வருடம் ஏப்பிரலுக்குப் பின் கிட்டத்தட்ட 1 வருடத்துக்கும் அதிகமான காலத்துக்குப் பின் தினசரி கொரோனா தொற்று அண்மையில் 68 ஆகப் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலையத்தில் 'பயங்கரவாத அச்சுறுத்தல்' குறித்து அமெரிக்கா, நட்பு நாடுகள் எச்சரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 82 300 வெளிநாட்டினர் மீட்கப் பட்டிருப்பதாகவும், எஞ்சியிருப்பவர்களை மீட்கும் பணி ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குப் பின்பும் தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

கோவிட்-19 பெரும் தொற்றின் சமீபத்திய மிக ஆபத்தான திரிபான டெல்டா திரிபின் வருகையின் பின் அமெரிக்காவில் கோவிட் தடுப்பு மருந்துகளின் வீரியம் குறிப்பிடத்தக்களவு குறைந்திருப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் பரிசோதனைப் பிரிவான CDC விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியில் தம்மை நிலைப் படுத்திக் கொள்ள இயலாத வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதை உறுதி செய்யும் இறுதித் தினமாக ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெறும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமைந்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …