free website hit counter

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையில் தடைப்பட்ட 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பை (GOR) உயர்த்துவதற்காக உள்நாட்டு சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை வாங்கியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) கூறுகிறது.

இன்று (26) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம், முன்னைய முறைமையின் கீழ் வீசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2024/25 மகா பருவத்திற்கான நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஹெக்டேர் ஒன்றிற்கு ரூபா 15,000 இலிருந்து ரூபா 25,000 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …