free website hit counter

தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், எனவே தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 36,900 க்கும் மேற்பட்ட மின்தடைகளால் 300,000க்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில், இந்த சவாலான காலங்களில் புத்தரின் ஞானம், ஒற்றுமை மற்றும் கருணை ஆகிய போதனைகளை உள்வாங்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"...ஒரு பிரதியை (கட்டுரையை) முழுமையாக வாசிப்பதன் மூலமே அதன் பொருள் விளங்கும். ஆனால் என்னுடைய பேஸ்புக் பதிவில் ஒரு சொல்லை மட்டும், பிரித்தெடுத்து அதற்கு பொலிஸார் தமது சுய வியாக்கியானம் வழங்கி நான் கூற வந்ததை முழுமையாக திரித்து, என்னைக் குற்றவாளி ஆக்கினார்கள். எனது பேஸ்புக் பதிவில், இலங்கையில் அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்படும் இனவாதப் பரப்புரைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் பேனாவையும் விசைப்பலகையையும் பயன்படுத்தி கருத்தியல் ரீதியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றே கூறினேன்..." என்று சமூக செயற்பாட்டாளரான ரம்சி ரசீக் கூறுகிறார்.

இலங்கையின் பொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு வலயங்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவகத்தை நிறுவுதல் மற்றும் முதலீட்டுச் சபை சட்டத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும் பொருளாதார மாற்ற சட்டமூலம் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வருடம் குறித்த காலப்பகுதியில் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும், தேர்தலுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …