free website hit counter

ஜனவரி மாதம் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களை ஆரம்பிக்கும் ஐ.தே.க

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளது.
லங்காதீபவின் கூற்றுப்படி, ஐக்கிய தேசியக் கட்சி 2024 ஜனவரி 19 முதல் தேர்தல் தொடர்பான தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளது.

முக்கிய பொதுக்கூட்டத்தை முதலில் கொழும்பில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, அதன் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் பல பேரணிகள் நடத்தப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் ஏனைய தொடர்புடைய குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula