free website hit counter

இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் மட்டக்களப்பு - வவுணதீவில் 10 மெகாவாட் சூரிய சக்தியை கொண்டு இன்று (11.10.2022) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

விண்ட்போஸ் பிரைவட் பி.எல்.சி, விதுல்லன்கா பி.எல்.சி மற்றும் ஐஎனர்ஜி சர்விஸ் பிரைவட் லிமிடட் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்து இந்த திட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையமானது வருடாந்தம் 20 ஜிகாவாட் மின்சாரத்தை தேசிய மின் அமைப்பில் சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் முதலாவது விவசாய மின் உற்பத்தி நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction