free website hit counter

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
விளையாட்டு துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் கோரிக்கைக்கு அமைய நேற்றைய தினம் முதல் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு அமைய அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பிற்காக ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மேலும் மூன்று பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு மேலதிகமாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction