free website hit counter

ஸ்டேட் வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 11 கேள்விகளுக்கு அரசால் பதிலளிக்கப்படவில்லை :சஜித்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அரசாங்கம் தனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, தான் எழுப்பிய 11 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தார்.

இரண்டு அரச வங்கிகளின் பிரதான கடன் பெற்ற 10 வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள் ஏன் மறைக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பிய எம்.பி பிரேமதாச, தனது கேள்விக்கு இன்றும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

"நாடாளுமன்றம் நாளை அல்லது நாளை மறுதினம் ஒத்திவைக்கப்படும் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நான் எழுப்பிய கிட்டத்தட்ட 11 கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது இதே கேள்விகளை நான் கேட்க வேண்டுமா?" என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula