free website hit counter

சொத்து வரி: நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2025 ஆம் ஆண்டு சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு சொத்து வரி விதிக்கப்படும்.

இது தொடர்பில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சாதாரண குடிமகனைப் பாதிக்காத வகையில் இந்த வரி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த வரியின் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்கள் பலப்படுத்தப்படுவதுடன், சாதாரண மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction