free website hit counter

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் குறியிடுதலை 2 வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவிற்கு இடையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் அல்ல, எட்டு கேள்விகள் கசிந்ததாகக் கூறியதால், முதல் தாள் மறு பரீட்சையை நடத்துவது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula