free website hit counter

முக்கிய ஆறுகளின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பெல்மடுல்ல, நிவித்திகல, எலபாத, குருவிட்ட, இரத்தினபுரி, அயகம, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் மில்லனிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வலா ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச பிரதேசங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ மற்றும் வத்தளை பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜின்கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் நெலுவ, தவலம, நாகொட, நியகம, வெலிவிட்டிய-திவித்துர, எல்பிட்டிய, அக்மீமன, பத்தேகம, போப்பே-பொத்தல பிரதேச பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula