பத்து வருடங்களுக்குப் பின்னர் நேரடி விமான சேவை.
அதன்படி, இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராம் தோறும் 4 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 5.41 மணிக்கு 261 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.


இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் எனவும், துருக்கி விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் விமான நிலையம் மற்றும் விமான நிலைய தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விமான நிலையத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் இந்த துருக்கி விமான சேவைகள் வாரத்தின் 7 நாட்களுக்கு ஒருமுறை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளன.