free website hit counter

Sidebar

05
, ஜூலை
26 New Articles

இலங்கையில் அதிகரிக்கும் வறட்சி காலநிலையால் 8 மாவட்டங்கள் பாதிப்பு - யாழ்ப்பாணம் கூடுதல் பாதிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 97,490 ஆக உயர்வு.
நாட்டில் தற்போது வறட்சி காலநிலை அதிகரித்துள்ளமையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலைக்குள் 8 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் 97,490 பேர் பாதிக்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, திருகோணமலை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 30,128 ஆகும்.

வறட்சியான காலநிலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகி உள்ளது. அந்த மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறட்சியான காலநிலைக்கு ஏற்ற வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula