free website hit counter

நாளை முதல் செல்போன் விலை 35% உயர்வு?

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அனைத்து வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் நாளை (ஜன. 01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இன்று (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த திரு.செனரத் மேலும் குறிப்பிடுகையில், நாளைய தினம் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி (VAT) 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த விலை உயர்வுக்கு ஏற்ப தொலைபேசி சந்தையில் 50% கொள்முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, ரூ. 100,000 விலையில் விற்கப்படும் தொலைபேசி நாளை முதல் 135,000 ரூபாய்க்கு விற்கப்படும் என தொலைபேசி விற்பனை மற்றும் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula