இலங்கையில் நாளை 26ந் திகதி முதல் நாடாளவிய ரீதியில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் தீர்வுகளை நடைமுறைப்படுத்த தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். இன்று காலை 8 மணியுடன் அதனை நிறைவுக்கு கொண்டு வந்ததாகவும், நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
