free website hit counter

எரிபொருள் விலையில் நள்ளிரவு பாரிய அதிகரிப்பு- பதவி விலகினார் பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் எம். உவைஸ் மொஹமட், பதவி விலகியுள்ளார். 

எரிபொருட்களின் விலையில் நேற்று நள்ளிரவு பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. 

எனினும் பதவி விலகலுக்கான உரிய காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பதவிக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை உவைஸ் மொஹமட் பதவி விலகுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction