இலங்கை அணி மீதான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) இடைநீக்கம் "அடுத்த சில நாட்களில்" நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.
வத்தலையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர், இலங்கை கிரிக்கெட்டின் இக்கட்டான காலகட்டத்தைத் தொடர்ந்து, நல்லதோர் பாதை இருவாகும் என அமைச்சர் உறுதியளித்தார்.
பெர்னாண்டோவின் அறிக்கையானது, இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரதம நிறைவேற்று அதிகாரி Geoff Allardice உட்பட ICC அதிகாரிகளுடனான சமீபத்திய தொடர்புகளிலிருந்து உருவாகியுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, ஐசிசி உடனான விவாதங்கள் "பயனுள்ளதாக" இருந்தன. மேலும் பிரதிநிதிகள் கவலைகளை நிவர்த்தி செய்வதில் ஏற்பட்ட முன்னேற்றத்தில் திருப்தி அடைந்ததாகத் தெரிகிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மற்றும் வருடாந்த ஐசிசி மாநாட்டை நடத்துவதை இலங்கை தவறவிட்டதன் மூலம், இந்த இடைநீக்கம் இலங்கை கிரிக்கெட்டுக்கு பொருளாதார ரீதியாக கணிசமான அடியை ஏற்படுத்தியுள்ளது.