free website hit counter

Sidebar

30
பு, ஏப்
53 New Articles

காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகல்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு

3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபது ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கவிருக்கும் முதல்  ஆட்டத்தில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகுவதாக பிசிசிஐ தெரிவித்தது. 

ஏற்கனவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப்பதிலாக சூரியகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula