அன்மைக்காலத்தில் இந்திய அளவில் கவனம் பெற்றிருப்பவர் சொல்லிசைப் பாடகர் வேடன். இவர் வரும் 14ந் திகதி திருச்சியில் நடைபெறும் 'மதச் சார்பின்மை காப்போம்' மகாநாட்டில் கலந்து கொள்வார் என்றும், அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையலாம் எனவும் ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஊகத்திற்கான காரணம், அன்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன், வீடியோ காலில் வேடன் உரையாடியதாகும்.இந்த வீடியோ உரையாடலின் போது, திருமாவளவன் " 35 ஆண்டுகளாக நாங்கள் பேசிவரும் அரசியலை, உங்கள் பாடலின் மூலம் சில நிமிடங்களில் கடத்தி விடுகிறீர்கள்" என்று திருமாவளவன் கூற, "உங்கள் பேச்சுக்களைக் கேட்பதால்தான் பாடும் எனக்கு தைரியம் கிடைக்கிறது" என்று பதிலுக்கு வேடன் கூறியுள்ளார்.
இந்த உரையாடலின் நிறைவில், " திருச்சிப் பேரணிக்கு நீங்கள் வந்தால் எழுச்சியாக இருக்கும். வாருங்கள்.." என்று வேடனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திருமாவளவன். திருச்சிக்கு வேடன் வருவாரா ? விடுதலைச் சிறுத்தைகளுடன் கைகோப்பாரா என்பது குறித்து உறுதியாக ஏதும் தெரியவில்லை.அவரது சொல்லிசைப் பாடல்களுக்காக மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ள நிலையில், அவருக்குப் பல்வேறு அரசியல் நெருக்கடிகளும், அழுத்தங்களும் உருவாகியுள்ளன. இந் நிலையில் அவர் நேரடி அரசியலில் நுழைய வேண்டும் எனும் கருதுக்கள் ஏற்கனவே எழுந்துள்ள நிலையில், திருமாவளவனுடனான உரையாடலும், அழைப்பும் கவனம் பெறுகிறது. கேரள அரசியற்கட்சிகளுடன் இணைந்து கொள்ளாத வேடன், விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைவாரா? இன்னும் சில தினங்களில் அதற்கான விடை கிடைத்துவிடும்.