இன்று எட்டு ஏர் இந்தியா விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
துபாய் , மெல்போர்ன், ஐதராபாத், புனே , மும்பை, போன்ற முக்கிய நகரங்களுகான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, ஏர் இந்தியா விமானங்களின் பல்வேறு சேவைகள் தொழில்நுட்ப கோளாறுககளைக் காரணங்காட்டி இரத்துச் செய்யப்பட்டு வருகின்றன.
பராமரிப்பு பணிகளைக் காரணங்காட்டிச் சேவைகள் இரத்தாகியதாகச் சொல்லப்பட்டாலும், சில சேவைகள் ரத்துக்கு முறையாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.