free website hit counter

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுப் பரீட்சையில் 4200 மாணவர்கள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நேற்று (07.05.2022) நாடாளவியரீதியில் நடைபெற்றது.

சுவிற்சர்லாந்தின் 26 மாநிலங்களிலும் அமைந்த, 61 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்ற இத்தேர்வில், முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்புவரையிலும் தமிழ்மொழிக் கல்விபயிலும் 4200 வரையிலான மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயபாடத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர்.

நேற்றைய தேர்வில் 4200 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளமையும், உயர்நிலைக் கல்வி அலகான பத்தாம் வகுப்புத்தேர்வில் 381 மாணவர்களும், பதினோராம் வகுப்புத்தேர்வில் 224 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில், 228 மாணவர்களும் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction