free website hit counter

மீண்டும் 'சூரரைப்போற்று' கூட்டணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’, இந்தியாவில் கொரோனா முதலாம் அலையின்போது
நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. பின்னர் சிறந்த வெளிநாட்டி மொழிப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின்னர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’தற்போது அதேபிரிவில் ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் தேர்வாகி இருக்கிறது. மேலும், ஆஸ்கர் விருதுகளுக்கான யூடியூப் சேனலிலும் இயக்குநர் காணொளியோடு படத்தின் சில காட்சிகளும் வெளியாகியிருக்கின்றன.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ‘எதற்கும் துணிந்தவன்’நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தையடுத்து இயக்குநர் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய மற்ற படங்கள் குறித்தும் தற்போது சூர்யா மனம் திறந்துள்ளார். சிவா,, சுதா கொங்கரா ஆகியோருடன் அடுத்தடுத்து இணைந்து படம் நடிக்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா - சூர்யா இணையும் படத்துக்கு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதும் உறுதியாகியிருக்கிறது. அதேபோல் சமீபத்தில் இயக்குநர் பாலாவுடன் ‘நந்தா’ படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய இருப்பதாக சூர்யா அறிவித்தது நினைவு கூறத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction