free website hit counter

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீட்டிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ஜூன் 14 ஆம் திகதியோடு ஊரடங்கு நீக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 21 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும் வீட்டு அத்தியாவசிய பொருள் கடைகளும் சலூன் கடைகளும் குறிப்பிட்ட நேரகாலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்று குறைவான மாவட்டங்களில் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction