free website hit counter

ஒரு கோவிட் தொற்றுக்காக நாடு முழுதும் 3 நாள் முடக்கம்! : நியூசிலாந்து பிரதமர் அதிரடி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரான அவுக்லேண்டில் செவ்வாய்க்கிழமை 1 நபரிடம் கோவிட்-19 தொற்று இனம் காணப் பட்டதை அடுத்து அங்கு நாடு முழுதும் 3 நாட்களுக்கு அதிரடி லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

இந்த லாக்டவுனானது அவுக்லேண்டில் தொடர்ந்து 7 நாட்களுக்கும், மற்றைய பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கும் அமுலில் இருக்கும்.

தனது தடையுத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன் அடையாளம் காணப்பட்ட குறித்த கோவிட் தொற்று மிக ஆபத்தான டெல்டா திரிபா என்பது குறித்து பரிசோதிக்கப் படுவதாகவும், ஆனால் இது இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction