free website hit counter

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மண்ணெண்ணெய் விநியோகம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொடரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று(10) நாடாளுமன்ற கூடிய போது மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
“சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்றொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடையும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டு 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் வழமை போல் முன்னெடுக்கப்படும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction