free website hit counter

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா கைது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது பொலிஸ் பேருந்தில் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொது செயலாளர் உமாசந்திரப் பிரகாஸ், உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction