free website hit counter

பண்டாரவெல குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கொரோனா தொற்று!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட

51 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்ப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்டாரவெல சுஜாதா செவன குழந்தைகள் காப்பகத்திலேயே இவ்வாறு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று இந்த உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், 11 குழந்தைகளுக்கு மேலதிகமாக 6 பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள், உணவகத்தில் பணி புரியும் இருவர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளிட்ட தரப்பினரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction