எதிர்வரும் 20ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தைப் பார்வையிடலாம்.
கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் அவசியம் குறித்து, இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் படைக்கலசேவிதர் முன்வைத்த பிரேரணை அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு பாராளுமன்ற கட்டத்தொகுதி மற்றும் பார்வையாளர் பகுதியை (கலரி) பாராளுமன்ற அமர்வு இடம்பெறாத நாட்களில் காலை 9.30 மணி முதல் 3மணி வரை( விடுமறை நாட்கள் தவிர்ந்த) பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.