free website hit counter

ரணில் பாராளுமன்ற உறுப்பினராகிறார்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த தேசியப் பட்டியல் பதவிக்கு நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு, அக்கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான நியமனம் தொடர்பில், சுமார் 9 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி தற்போது தீர்மானமொன்றுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction