free website hit counter

ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் இருந்து விலகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச் 27 ஆம் திகதி எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் திகதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச் 27 ஆம் திகதி எதிர்கொள்கிறது. இந்த நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியில் விளையாடுவது கேள்விக் குறியாகியுள்ளது.

கட்டைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் டெல்லி அணிக்கு எதிராக நடைபெறும் மும்பை அணியின் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி தக்கவைத்த 4 வீரர்களுள் சூர்யகுமார் யாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction